பெரியகுளம்; பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் வைகாசி 2 ம் வாரம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பகதர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல் பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி 2 ம் வாரம் சனிக்கிழமைமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.