Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூரில் திருஞானசம்பந்தர் ... கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி தேரோட்டம்; லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி தேரோட்டம்; லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

26 மே
2024
11:05

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவம் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலையில் தங்க சப்பரத்திலும், மாலை, சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி உலா வந்தார். இரண்டாம் நாள் உற்சவமான கடந்த 21ம் தேதி காலையில், ஹம்ஸ வாகனத்திலும், மாலை சூரிய பிரபையிலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி உலா வந்தார். மூன்றாம் நாள் பிரபல உற்சவமான கடந்த 22ம் தேதி காலை கருடசேவை உற்சவமும், மாலை ஹனுமந்த வாகன உற்சவமும் நடந்தது. இதில், நான்காம் நாள் உற்சவமான கடந்த 23ம் தேதி காலை சேஷ வாகனமும், மாலை சந்திர பிரபை வாகனமும் நடந்தது. ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை, வரதராஜ பெருமாள், நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு யாளி வாகனத்திலும் எழுந்தருளி உலா வந்தார். ஆறாம் நாள் உற்சவமான நேற்று காலை, ஸ்ரீதேவி, பூதேவியருடன், வரதராஜ பெருமாள், வேணுகோபாலன் திருக்கோலத்தில், தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இரவு யானை வாகன உற்சவம் நடந்தது.

இதில், ஏழாம் நாள் இன்று காலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்தனர். தேர் முழக்கி வீதிகள் வழியே வலம் வந்தது. எஸ்.பி., சண்முகம் தலைமையில், 1,500 போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 28ம் தேதி அனந்தசரஸ் திருக்குளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar