வைகாசி சோமவாரம்; ஆதி கும்பேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2024 10:05
கோவை; ராம் நகர், வி. என். தோட்டம், முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் இரண்டாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் ஆதி கும்பேஸ்வருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில் வெண்பட்டு வஸ்திரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.