புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், கீழ 7ம் வீதி ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்தில் அருள்பாலித்து வரும் மாதா ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் சன்னதி வளாகத்தில் உள்ள தவத்திரு சாந்தாநந்த சுவாமிகள் 22வது ஆராதனை நடந்தது. வேதமந்திரங்கள் முழங்க அபிஷேகம் மற்றும் ஆராதனை தற்போதைய பீடாதிபதி தவத்திரு பிரணவானந்த மஹா ஸ்வாமிகள் தலைமையில் நடந்தது. அதைத் தொடர்ந்து, தீபாரதனை நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.