திருவோண விரதம்; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2024 10:05
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி - பூதேவி தாயார்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாவில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பெருமாள் மற்றும் தேவியர்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.