கொங்குகாசி அஷ்டபைரவர் கோவிலில் பைரவருக்கு ஆறாட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2024 03:05
கோவை; சிறுவாணி சாலை நாதே கவுண்டன் புதூரில் அமைந்துள்ள கொங்குகாசி என்றழைக்கப்படும் அஷ்டபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா விமரிசையாக நேற்று நடந்தது. மனித வாழ்வில் கஷ்டங்கள் ஏற்படுவது இயல்பு. அப்படிப்பட்ட சூழலில் நாம் சோர்ந்து போகமால் சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவரை வழிபட்டு கஷ்டத்திலிருந்து விடுபடலாம். நேற்று மாலை 5 மணிக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை சிறப்பாக நடந்தது. 108 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பிரம்மாண்ட வேள்வி நடந்தது. 108 குடங்களில் பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்களிலிருந்து பைரவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்திலுள்ள ஆறாட்டுக்குளத்தில் பைரவருக்கு ஆறாட்டு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நிறைவாக பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது.