காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடலில் கிடந்த காளி சிலையை போலீசில் ஒப்படைத்தார்.
காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி சீனிவாசா நகரை சேர்ந்தவர் பாலமுருகன் 24. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் அருகே உள்ள சாமி தோப்பு கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கடலில் ஒன்றரை அடி வெண்கல காளி சிலை கிடந்துள்ளது. சிலையை எடுத்து வந்து பாலமுருகன் தனது சாமியாடி அத்தையிடம் கொடுத்துள்ளார். சிலை குறித்து ஊர் மக்களுக்கு தெரிந்ததால் அதனை அரசிடம் ஒப்படைக்க வலியுறுத்தி உள்ளனர். பாலமுருகன் சிலையை காரைக்குடி தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் சிலையை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர்.