சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் கலிவேட்டை நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2024 06:05
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழாவின் 8 ஆம் நாளான இன்று அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டைக்கு புறப்பட்டார்.
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட் கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு வைகாசிதிருவிழா 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் இன்று 8ம் திருவிழாவில் அய்யா வெள்ளை வாகனத்தில் குதிரை முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல் நிகழ்ச்சி துவங்கியது. வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டைக்கு புறப்பட்டார். தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 9ம் நாள் இரவு அனுமன் வாகன பவனி, 10ம் திருவிழாவான (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனி 11 திருவிழாவான ஜூன் மாதம் 3ம் தேதி திங்களன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட் டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை குரு மார்கள் சுவாமி, தங்க பாண்டியன், ராஜசேகரன், வக்கீல் ஆனந்த், இன்ஜினியர் அர விந்த், வக்கீல் அஜித் ஆகியோர் செய்து பக்தர்களுக்கு அருள்பா வருகின்றனர்.