திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்; தரிசனத்திற்கு 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2024 10:06
திருப்பதி; கோடை விடுமுறை, வார இறுதி நாட்களை அடுத்து திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. 30 மணி நேரம் காத்திருக்கும் தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று காலை 31 காத்திருப்பு அறைகளை கடந்து, 5 கிமீ., தூரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களுக்கு 30மணிநேரம் காத்திருப்பிற்கு பின்பு தரிசனம் செய்தனர்.