வைகாசி சனி; துடியலூர் குபேர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2024 02:06
கோவை; மேட்டுப்பாளையம் ரோடு துடியலூர் பகுதியில் இருக்கும் பாதுகாப்பு குபேர ஆஞ்சநேயர் கோயிலில் வைகாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குபேர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. வெற்றிலை மற்றும் துளசி மாலை அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.