பதிவு செய்த நாள்
02
ஜூன்
2024
06:06
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு அதிகாலை முதல் திருமுறை பாராயணம், ஆறாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹீதி, தீபாரதனை நடந்தது. இதனையடுத்து பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது பின்னர் பிரதான யாக சாலை பூஜை, பூர்ணா ஹீதி, யாத்திரதானம், கும்பங்கள் புறப்பாடு நடந்தது. இதனையடுத்து காலை 7.50 மணிக்கு ரகுபட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுரங்களுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் அம்பாள், சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இரவு 6:00 மணிக்குமேல் திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம், தருமபுரம் ஸ்ரீமத் மீனாட்சி சுந்தர தம்பிரான் சுவாமிகள், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ. மான்ராஜ், அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, துணை ஆணையர் வளர்மதி, புலவர் பாலகிருஷ்ணன், சிவகாசி விஸ்வநாத சுவாமி விசாலாட்சி அம்மன் திருக்கோயில் மண்டபடிதாரர்கள் சங்க தலைவர் வைரமுத்து, துணைத் தலைவர் சேகரன், செயலாளர் யுவராஜ், பொருளாளர் விஸ்வநாதன், உறுப்பினர் மூர்த்தி, சிவாச்சாரியார்கள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், சிவனடியார்கள் குழுவினர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை தக்கார் லட்சுமணன், செயல் அலுவலர் முத்து மணிகண்டன் மற்றும் கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்.பி .முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.