சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கோஷ்டியூர் நம்பிகள் அவதார நட்சத்திரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2024 07:06
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கோஷ்டியூர் நம்பிகளின் 1038 வது அவதார திருநட்சத்திர உத்ஸவம் நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலின் மூலவருக்கு ‛எம் பெருமனார் ’ என்ற திருநாமத்தைச் சூட்டியவர் திருக்கோஷ்டியூர் நம்பிகள். இவரது அவதார திருநட்சத்திரத்தை முன்னிட்டு மூன்று நாள் உத்ஸவம் நடந்தது. நேற்று 3ம் நாள் காலை 8:00 மணிக்கு உற்ஸவ நம்பிகள் பெருமாள் சன்னதி எழுந்தருளி மங்களாசாசனம் பெற்றார். தொடர்ந்து தாயார், ஆண்டாள் சன்னதி எழுந்தருளி மங்களாசாசனம் பெற்றார். பின்னர் தொடர்ந்து திருவீதி புறப்பாடு நடந்தது. பின்னர் நாலாயிர திவ்ய பிரபந்த சாற்று முறை, தீர்த்த கோஷ்டி நடைபெற்றது.