பதிவு செய்த நாள்
07
ஜூன்
2024
09:06
மேல்மலையனுார் : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம், நேற்று இரவு நடந்தது. இதை முன்னிட்டு, அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம, தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு, 11:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், சிவ வாத்தியங்கள், மேளதாளம் முழங்க, ஊஞ்சல் மண்டபத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார்.அங்கு விசேஷ தீபாராதனையுடன் ஊஞ்சல் தாலாட்டு துவங்கியது. கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இரவு, 12:30 மணிக்கு, மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தில் பங்கேற்றனர்.