வைகாசி வெள்ளி; கோவை மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2024 10:06
கோவை; கோவை என். எச். ரோடு டவுன்ஹால் ரோடு சந்திப்பில் இருக்கும் மாகாளியம்மன் கோவிலில் வைகாசி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அம்மனுக்கு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் சந்தன காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.