கோவை; சுந்தராபுரம் குறிச்சி ஹவுஸிங் யூனிட் பேஸ் - 1 ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 21ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது. 48 நாட்கள் நடந்து வந்த மண்டல பூஜை இன்று நிறைவு பெற்றது. விழாவை முன்னிட்டு இன்று யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.