நெல்லையப்பர் கோயில் தேர்களை தயார்படுத்தும் பணி மும்முரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2024 12:06
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழாவிற்கு தேர்களை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடக்கிறது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆனித்திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தஆண்டு ஆனித்திருவிழா வரும் 13ம் தேதி கொடியேற்றத்துடன்து வங்குகிறது. 21ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. தேர்த்திருவிழாவில்லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பர். திருவிழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர். திருவிழாவையொட்டி, கோயிலில் வெள்ளி வேய்ந்தமர வாகனங்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் பணி ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் நடக்கிறது. சுவாமி, அம்பாள் தேர் அலங்காரத்தட்டிகள் (மஞ்சம்) பழுது அடைந்ததை புதிதாக மாற்றும் பணி நடக்கிறது. தேரோட்ட நாள் நெருங்குவதையொட்டி தேர்களை தயார்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடக்கிறது. தேர்களின் ஷெட்களை அகற்றி அவற்றை சீரமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. தேர்களில் பொருத்துவதற்கு கம்புகள், கட்டைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தேர்கள் சீரமைப்புப்பணியில் ஊழியர்கள் தினமும் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இப்பணி நிறைவு பெறும் என அறநிலையத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
மண்டபம் சேதம்; அம்பாள் தேரில் எழுந்தருளும் மண்டபத்தின் மேற்பகுதி இடிந்து சீரற்றநிலையில் உள்ளது. இது கீழே விழுந்தால் அப்பகுதியில் நடமாடுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
உள்ளூர் விடுமுறை; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் முன்னிட்டு ஜூன் 21 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.