அவிநாசி; சேவூர் அருகே மூலக்குரும்பபாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகாலக்ஷ்மி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அவிநாசி ஒன்றியம், சேவூர் ஊராட்சிக்குட்பட்ட மூலக் குரும்பபாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகாலக்ஷ்மி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோவிலில் நேற்று மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, 7 ம் தேதி கணபதி ஹோமம், கோமாதா பூஜை,காட்டுப்பாளையம் பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 8ம் தேதி வாஸ்து சாந்தி, கலாகர்ஷணம், பாபனா அபிஷேகம், சுவாமி வைத்தல், அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை முதல் கால யாக வேள்வியில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவான இன்று இரண்டாம் கால யாக பூஜையில் நாடி சந்தனம்,கலச புறப்பாடு ஆகியவை தொடர்ந்து ஸ்ரீ மகாலக்ஷ்மி ஸ்வாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மூலக்குரும்பபாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.