மானாமதுரை சங்கு விநாயகர் கோயிலில் வைகாசி களரி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2024 10:06
மானாமதுரை; மானாமதுரையில் உள்ள சங்கு விநாயகர் கோயிலில் வைகாசி உற்சவ திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை சங்கு விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள கற்பூர சுந்தர சாமி, பொன்னர் சங்கர்,முத்துராக்கு,கோட்டை முனிஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு வருடந்தோறும் வைகாசி மாதம் களரி பூஜை மற்றும் அசைவ படையல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கிய நிலையில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அசைவ படையல் மற்றும் களரி பூஜைக்காக நேற்று முன்தினம் நள்ளிரவு கோயில் முன்பாக ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கிய பின்னர் ஆண்கள் மட்டுமே பங்கேற்று கற்பூர சுந்தர சாமிக்கு ஏராளமான ஆடு,கோழிகளை பலியிட்டு பின்னர் அதனை சமைத்து படையலிட்டு சுவாமியை வழிபட்டனர்.முன்னதாக சுவாமிக்கு பால், பன்னீர்,சந்தனம்,குங்குமம்,திரவியம் உள்ளிட்ட18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமியாட்டம் ஆடினர்.இந்த விழாவில் மதுரை, காரைக்குடி,பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.