சூலூர்; பாப்பம்பட்டி பிரிவு புடவைக்காரி மகாலட்சுமி அம்மன் கோவில் ஆண்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பிரிவில் உள்ள புடவைக்காரி ஸ்ரீ மகாலட்சுமி அம்மன், கருப்பராயன், கன்னிமார் சுவாமி கோவில்கள் பழமையானவை. இங்கு இரண்டாம் ஆண்டு விழா பூஜைகள் நேற்று நடந்தன. காலை, 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கின. புனித நீர் கலசங்கள் வைத்து ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் , பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்த்தில் மகாலட்சுமி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகா தீபாராதனைக்கு பிறகு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சிவசாமி, பழனிசாமி, பேச்சிமுத்து, வக்கீல் விஜயகுமார், சிவசண்முகம் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.