தீவனுார் விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2024 10:06
திண்டிவனம்; திண்டிவனம் அருகே தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, தச கலச பூஜை, 108 சங்குக்கு விசேஷ பூஜை, திரவ்ய ேஹாமம், பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து 10:00 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் 108 சங்காபிேஷகத்தை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர் சகுந்தலா, அறங்காவலரின் முகவர் மணிகண்டன், மண்டல பூஜை விழாக்குழு தலைவர் ரவி, துணைத் தலைவர் செல்லபெருமாள் உட்பட பலர் செய்திருந்தனர்.