நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2024 11:06
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் அடிவாரத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது. திருவிழா கடந்த மாதம் 14 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் பாராத சொற்பொழிவு நடந்தது. கடந்த 2 ம் தேதி முதல் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து, வீதிஉலா நடந்தது. 3ம் தேதி இரவு அர்சுணன் –திரவுபதியம்மன் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் கெடில ஆற்றிலிருருந்து ஊர்வலமாக வந்து இரவு 8:30 மணிக்கு தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.