ஏரல்; குரங்கணி முத்து மாலை அம்மன் கோயிலில் நேற்று வருஷாபிஷேகம் நடந்தது. தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் நேற்று வருஷாபிஷேகம் நடந்தது. காலையில் கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜை தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. வருஷாபிஷேகத்தைமுன்னிட்டு முத்து மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் சென்னைவாழ் குரங்கணி நாடார் சங்கத்தின் சார்பில் சிறப்பு அன்னதானம் நடந்தது. வருஷாபிஷேகத்தில் சென்னைவாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவைவாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், சுற்றுவட்டார கிராமமக்கள்மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.