திருநெல்வேலி; நெல்லை ஜங்ஷன் மேலவீரராகவபுரம் சொக்கநாத சுவாமி கோயில் வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. நெல்லை ஜங்ஷன், மேலவீரராகவபுரம் மீனாட்சி அம்பாள் சமேத சொக்கநாத சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா 2 நாட்கள் நடந்தது. விழாவின் துவக்க நாளான நேற்றுமுன்தினம் காலை யாகசாலை மகா கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள், தாரா ஹோமம் நடந்தது. இதனையடுத்து பூர்ணாகுதி, மகா தீபாராதனை, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. 2ம் நாளான நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மீனாட்சி அம்பாள், சொக்கநாதர் சுவாமி விமானங்கள், மூலவருக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தத. திரளான பக்தர்கள் கலந்த கொண்டனர். இரவு புஷ்பாஞ்சலி, பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடந்தது.