பதிவு செய்த நாள்
10
ஜூன்
2024
12:06
தக்கலை, கூட்டமாவு பகவதி அம்மன் திருக்கோவில் ஜுர்ணோத்தாரண அஷ் டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலையில் மகா கண பதி ஹோமம், கோமாதா பூஜை, நவசக்தி பூஜை, பிரதிஷ்டா ஹோமம், த்ரவ்ய ஹோமம், மகா பூர்ணா ஹீதி,அஷ்டபந் தனம் சாத்துதல், மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தன. தொடர்ந்து இணை ஆணையாளர், ரத்தின வேல் பாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ராம கிருஷ்ணன், சாதுக்கள், ஆன்மிக பெரியோர்கள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஆலய தந்திரி கமுக்கறை சதீஷ் போற்றி நடத்தினார். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் மாவட்ட பா.ஜ., தலைவர் தர்மராஜ், ஸ்ரீ பத்மநாபன், கமுக்கறை ஹைந்தவ முன்னேற்ற சங்க நிர்வாகிகள், கும் பாபிஷேக மகளிரணி பொறுப்பாளர்கள், அர சியல் கட்சி பிரமுகர் கள் உட்பட ஆயிரக்க ணக்கான பக்தர்கள் பங் கேற்றனர். வரும் 13ம் தேதி ஏழாம் நாள் விழாவுடன் முடிவடைகிறது.