திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2024 04:06
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது.
திருப்பரங்குன்றம் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த நட்சத்திர தினத்தன்று ஆண்டுதோறும் வருடாபிஷேகம் நடக்கிறது. இன்று காலை கோயில் விசாக கொறடு மண்டபத்தில் வெள்ளி குடங்கள், 15 சொம்புகளில் புனிதநீர் நிரப்பி வைத்து யாக பூஜை நடந்தது. மாலையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தைல காப்பும், மற்ற மூலவர்களான கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு சாம்பிராணி தைலம் சாத்துப்படியானது. மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள வேலுக்கு புனித நீர் அபிஷேகம் முடிந்து அனைத்து மூலவர்களுக்கும் சமகாலத்தில் தீபாராதனை நடந்தது.