குன்றத்துார்; குன்றத்துாரில் சேக்கிழாருக்கு தனி கோவில் உள்ளது. சேக்கிழார் கோவிலில் ஆண்டு தோறும் குருபூஜை விழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு கடந்த 1ம் தேதி குருபூஜை விழா துவங்கியது. விழாவின் 10ம் நாளான நேற்று காலை சேக்கிழாருக்கு மஹா அபிஷேகம், புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. இரவு சேக்கிழார், குன்றத்துாரில் உள்ள கந்தழீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளி சிவபெருமானின் திருவருளுடன் ஜோதியில் கலத்தல் நிகழ்வு நடந்தது.