நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2024 11:06
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. வராஹி அம்மனை வளர்பிறை பஞ்சமி நாளில் வணங்கினால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதையொட்டி, வளர்பிறை பஞ்சமி தினமான நேற்று வராஹி அம்மனுக்கு சிறப்ப பூஜைகள் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.