வடலூரில் 6 திரைகளை நீக்கி வைகாசி ஜோதி தரிசனம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2024 12:06
வடலுார்: சத்திய ஞான சபையில், அருட்பெருஞ்ஜோதி... அருட்பெருஞ்ஜோதி.... தனிப்பெருங்கருணை... அருட்பெருஞ்ஜோதி... என்ற மகா மந்திரம் முழங்க, பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்.
வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா சிறப்பாக நடைபெறுகிறது. அதன்படி நேற்று வைகாசி மாத பூச நட்சத்திரத்தையொட்டி, இரவு 7.50 மணி முதல் 8.50 மணி வரை 6 திரைகளை நீக்கி, மூன்று முறை ஜோதி தரிசனம் நடைபெற்றது. ஜோதி தரிசனத்தைக் காண திரண்டிருந்த பக்தர்கள், அருட்பெருஞ்ஜோதி... அருட்பெருஞ்ஜோதி... தனிப்பெருங்கருணை... அருட்பெருஞ்ஜோதி... என, மகா மந்திரத்தை முழங்கினர்.