தொட்டிச்சி காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா; பால்குடம் எடுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2024 01:06
மேலுார்; மேலுார் பூவாடை தொட்டிச்சி காளியம்மன் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மே 28 பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். இன்று நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்க பெற்ற பக்தர்கள் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி எடுத்து கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு பக்தர்கள் பூங்குழி இறங்கினர். அதனை தொடர்ந்து கிடா வெட்டி பொங்கல் வைக்கப்பட்டது. நாளை (ஜூன் 12) பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலமும், ஜூன் 13 மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.