ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2024 01:06
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரத்திற்கு பூஜாரி சண்முகவேல் தீபாரதனை காட்டினார். பின் அம்மனுக்கு காப்புகட்டும் நிகழ்ச்சி நடந்தது.இதையடுத்து பூக்குழி,அக்னிசட்டி,பால்குடம் எடுக்கும் பக்தர்கள் காப்புகட்டி விரதம் துவங்கினர். 17 நாள் விழாவில் முக்கிய நிகழ்வாக ஜூன் 18 பால்குடம், அக்னிசட்டி, பூப்பல்லக்கு, 19 பூக்குழி இறங்குதல், 25 திருத்தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.ஏற்பாடுகளை மண்டகபடிகாரர்கள், நிர்வாக அதிகாரி இளமதி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.