17 ஆண்டுகளுக்கு பின் ஊர்காவல் கருப்பசாமி கோயிலில் உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2024 05:06
பாலமேடு: பாலமேடு அருகே பொந்துகம்பட்டியில் 17 ஆண்டுகளுக்கு பின் ஊர்காவல் கருப்பசாமி கோயில் உற்ஸவ விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் இரவு பூஜாரி சாமியாடி கருப்பசாமியை கோயில் அழைத்து வருதல், சுவாமி கண் திறப்பு மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வானவேடிக்கை, ராஜா ராணி ஆட்டம் நடந்தது. 2ம் நாள் சுவாமி குதிரைகளை எடுத்து பூஞ்சோலை சென்றனர். பொங்கல் வைத்து, கிடா வெட்டி வழிபாடு செய்தனர். சேந்தமங்கலம், பாறைப்பட்டி, பொந்துகும்பட்டி உள்ளிட்ட கிராம கோயில் காளைகளுக்கு வழிபாடு மரியாதை செய்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சேந்தமங்கலம்,பொந்துகம்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.