நத்தம் வேணுகோபால சுவாமி கோவிலில் வாராஹி அம்மன் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2024 10:06
நத்தம், நத்தம் கோவில்பட்டி பாமா ருக்மணி வேணுராஜகோபால சுவாமி கோவிலில் வாராஹி அம்மன் சிலை பிரதிஷ்டை விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை யாகசாலைகள் அமைக்கப்பட்டு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கன்யா பூஜை, மஹாபூர்ணாகுதி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் கோவிலின் உள் பிரகாரத்தில் மஹாவாராஹி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மஹாவாராஹி அம்மன் கைங்கர்யா சபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.