இடையபட்டி வேட்டைக்காரன், கருப்பசாமி கோவில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2024 10:06
நத்தம், நத்தம் அருகே இடையபட்டி வேட்டைக்காரன், கருப்பசாமி கோவில் புரவி எடுப்பு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் நேற்று வத்திபட்டி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமிகள் மற்றும் கன்னிமார், குதிரை, மதிலை சிலைகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஊர் மந்தையில் கண் திறக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் சென்ற சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனைகள் நடந்தது. பின்னர் சந்தனக்குடம் எடுத்தும், கிடாய் வெட்டியும் பக்தர்கள் தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர். தொடர்ந்து இன்று மாலை வர்ணக் குடைகளுடன் வேட்டைக்காரன், கருப்பசாமி தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக இருப்பிடம் போய் சேர்கிறது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இடையபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.