பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.55 கோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2024 10:06
பழநி; பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.55 கோடி கிடைத்தது.
பழநி முருகன் கோயிலில் ஜூன் 10,11 இரு நாட்கள் உண்டியல்எண்ணிக்கை நடைபெற்றது. இரு நாட்கள் எண்ணிக்கையில் காணிக்கையாக 965 கிராம் தங்கம், 29.158 கிலோ வெள்ளி கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 55 லட்சத்து 37 ஆயிரத்து 740 மற்றும் 574 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. நேற்று ஜூன் 11ல் எண்ணிக்கையில் காணிக்கையாக 187 கிராம் தங்கம், 17.119 கிலோ வெள்ளி கிடைத்தது. மேலும் ரூ. 89 லட்சத்து 10 ஆயிரத்து 890 மற்றும் 147 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இலை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.