பதிவு செய்த நாள்
12
ஜூன்
2024
10:06
சத்ரபதி சாம்பாஜிநகர்; மஹாராஷ்டிராவில் நந்தேட் மாவட்டத்தின் ஹோட்டால் கிராமத்தில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில், அங்குள்ள பழங்கால கோவிலுக்கு அருகே உள்ள குப்பைகளை தொல்லியல் துறையின் அகற்றினர்.
அங்கு, மண்ணுக்கு அடியில் புதைந்திருந்தது தெரியவந்தது. உடனே, அங்கு அதிகாரிகள், நான்கு அகழிகளை தோண்டியபோது, சிவன் கோவிலின் அடிப்பகுதியையும், ஒரு சிவலிங்கத்தையும் கண்டறிந்தனர். இது தவிர, கி.பி., 1070ம் ஆண்டு காலக்கட்டத்தில் இக்கோவில்களை கட்ட உதவிய நன்கொடையாளர்களின் பங்களிப்புகளை குறிக்கும் மூன்று கல்வெட்டுகளும் கண்டறிந்தனர். இது தொடர்பாக மாநில தொல்லியல் துறையின் நாந்தேட் பிரிவு பொறுப்பாளர் அமோல் கோட் கூறுகையில், “இது, சாளுக்கியர்களின் தலைநகராக விளங்கிய பகுதி. இங்கு சிவன் கோவிலின் பகுதியுடன், ஒரு சிவலிங்கத்தையும் கண்டறிந்துள்ளோம். அதன் அருகே, சில செங்கற்களும் கிடைத்தன. இதன் வாயிலாக, அக்காலத்திலேயே கோவில் கட்டுமானத்தின் போது செங்கற்கள் பயன்படுத்தப்பட்டது நிரூபணமாகி உள்ளது. தொடர்ந்து, இப்பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெறும்,” என்றார்.