பெருங்கரை ராஜராஜேஸ்வரி கோவிலில் வைகாசி மஞ்சள் நீராட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2024 10:06
பரமக்குடி; பரமக்குடி அருகே பெருங்கரை கிராமம் ஆதி சக்தி ராஜராஜேஸ்வரி சக்தி பீடத்தில் 16ம் ஆண்டு வைகாசி விழாவில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். இக்கோயிலில் ஜூன் 3 காலை 10:30 மணிக்கு கணபதி ஹோமம், காப்பு கட்டுதலுடன் வைகாசி விழா துவங்கியது. அன்று மாலை அம்பாள் ராஜராஜேஸ்வரி சக்தி பீடத்தில் எழுந்தருளினார். தினமும் அம்மன் சந்தன மாரியம்மன், மீனாட்சி அம்மன், விசாலாட்சி, காமாட்சி, மகாலட்சுமி, சரஸ்வதி, பார்வதி உள்ளிட்ட அலங்காரங்களில் அருள் பாலித்தார். ஜூன் 10ல் திருக்கல்யாணம் உற்ஸவம் நடந்தது. நேற்று காலை 6:00 மணி முதல் பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து அக்னி சட்டி, பால்குடம் மற்றும் சக்தி கரகம் ஏந்தி சென்றனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கால பைரவர் வழிபாடு, உற்ஸவ சாந்தி நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.