Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தண்டுமாரியம்மன் கோவில் ... திருப்போரூர் மலைக்கோவில் செல்லும் பாதை செப்பனிட பக்தர்கள் கோரிக்கை திருப்போரூர் மலைக்கோவில் செல்லும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடிந்து விழுந்த பெருமாள் கோவில் குளம் மதில் சுவர்; 5 மாதங்களாக கண்டுகொள்ளாத அவலம்
எழுத்தின் அளவு:
இடிந்து விழுந்த பெருமாள் கோவில் குளம் மதில் சுவர்; 5 மாதங்களாக கண்டுகொள்ளாத அவலம்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2024
11:06

பூந்தமல்லி; பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான கோவில் குளத்தின் மதில் சுவர் மற்றும் குளத்தை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பூந்தமல்லியில், வைணவ மகான் ராமானுஜரின் குருவான திருக்கச்சி நம்பிகளின் அவதார தலமான, வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், பெருமாள் நீராடிய ஒரு குளமும், ஆண்டாள் நீராடிய ஒரு குளமும் உள்ளன. இதில், ஆண்டாள் நீராடிய குளம், பராமரிப்பின்றி உள்ளது. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பை, இந்த குளத்தில் கலந்து மாசடைந்து காணப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கன மழையின் போது, சாலையோரம் உள்ள இந்த குளத்தின் மதில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஆறு மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் இந்த மதில் சுவர் சீரமைக்கப்படவில்லை. மேலும், குளத்தின் படிக்கட்டுகளும் பல இடங்களில் சேதமாகி உள்ளன. எனவே, குளத்தை சீரமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறுகையில்,‘ஆண்டாள் நீராடிய இந்த குளம், தற்போது பராமரிப்பின்றி படுமோசமான நிலையில் உள்ளதை பார்க்கும் போது, வேதனையாக உள்ளது. இந்த குளம், இப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. எனவே, இந்த குளத்தை சீரமைத்து, குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் மழைநீரை குளத்தில் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மதில் சுவர் மற்றும் படிக்கட்டுகளை சீரமைக்க பொறியாளர் குளத்தை நேரில் ஆய்வு செய்துள்ளார். திட்ட மதிப்பீடு தயாரித்து, குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம், : ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வெளி மாவட்டங்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் புரட்டாசி மாத மகாலய பட்ச அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாளய அமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவர். இது குறித்து காஞ்சிப் பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் ... மேலும்
 
temple news
உடுமலை ; மகாளய அமாவாசையை முன்னிட்டு உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில்  பிரம்மா சிவன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக பக்தர்களின் பிரார்த்தனைகளுடன், ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar