சிலுவத்தூர் புதூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2024 03:06
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே சிலுவத்தூர் புதூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாணார்பட்டி அருகே சிலுவத்தூர் ஊராட்சி பதூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் கோபூஜையுடன் துவங்கியது. இன்று 4 கால யாக வேள்வி பூஜைகளைத் தொடர்ந்து புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க கோவிலில் உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் புதூரை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிராம பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.