செந்துறை பெரியூர்பட்டி பூமாரியம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2024 03:06
நத்தம்; நத்தம் அருகே செந்துறை - பெரியூர்பட்டியில் பூமாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கடந்த ஜூன் 2-ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.தொடர்ந்து நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மாவிளக்கு, அக்னிசட்டி,பால்குடம், பொங்கல் வைத்தல், கிடாய்கள் வெட்டி பக்தர்கள் தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர். விழாவில் இன்று மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியூர்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.