பதிவு செய்த நாள்
12
ஜூன்
2024
03:06
காஞ்சிபுரம்: காஞ்சி ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில், ஆதிகாமாட்சி என அழைக்கப்படும் ஆதிபீடாபரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, 2022ம் ஆண்டு, செப்., 1ம் தேதி பாலாலயம் நடந்தது. தொடர்ந்து 1 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 7ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று முன்தினம், காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், இரவு 7:00 மணிக்கு காஞ்சிபுரம் ருத்ரயாழ் இசை மற்றும் நுண்கலைகழகம் ஷர்மிளா மற்றும் குழுவினரின் வீணை, இசை, பரதம் உள்ளிட்டவை நடந்தது. நேற்று, அதிகாலை 4:00 மணிக்கு ஆறாம் கால யாகபூஜையும், 6:00 மணிக்கு கலசம் புறப்பாடும், 6:30 மணிக்கு மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க வேதவிற்பன்னர்கள் கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவர் அம்பாள், ஆதிகாமாட்சிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு மஹா அபிஷேகமும், பிரசாத வினியோகமும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் ஆதிகாமாட்சியம்மன் வீதியுலா வந்தார்.