பதிவு செய்த நாள்
12
ஜூன்
2024
04:06
மேட்டுப்பாளையம்; நடூரில் புதிதாக கட்டிய சீதாாராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் நடூர், கண்ணப்பன் லே அவுட்டில், சீதாராமர் பஜனை மடம் செயல்பட்டு வந்தது. 137 ஆண்டுகள் பாரம்பரிய மடம், சீதாராமர் கோவிலாக மாற்றி கட்டப்பட்டது. இந்த கோவில் கருவறையில், ராமர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர், ஆகிய மூலவர் சுவாமி சிலைகள் பதிக்கப்பட்டுள்ளன. இக்கோவில் கும்பாபிஷேக விழா, 11ம் தேதி துவங்கியது. மதியம் கோதண்ட ராமர் பஜனை கோவில் இருந்து, பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கோவிலில் அங்குரார்ப்பணம், கும்ப ஆவாகணம், ஹோமம், திவ்ய பிரபந்தம், சாற்று முறை, விமான கலசம் ஸ்தம்பிதம், சுவாமி சிலைகள் பிரதிஷ்டை ஆகியவை செய்யப்பட்டன. இன்று காலை வேத பாராயணம், திவ்யப்பிரபந்தம், யாத்ராதானம் ஆகியவை நடந்தது. 9:00 லிருந்து, 10 மணி வரை யாகசாலையில் இருந்து, தீர்த்தக் கலசங்கள் எடுத்துச் சென்று, கோபுர கலசத்திற்கும், சுவாமிகள் மீதும், காரமடை அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர் தலைமையில், ஹரிகிருஷ்ண சுவாமி புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மதியம் அலங்கார பூஜையும், அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.