ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே கீழக்கோட்டை மஞ்சன மாரியம்மன் கோயில், கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக அனுக்கை, விக்னேஸ்வரர், விநாயகர் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், கோ பூஜையும் நடைபெற்றன. பின்பு, யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் மேல தாளங்கள் முழங்க சிவாச்சாரியார்களால் ஊர்வலமாக எடுத்து சென்று கோயிலை வலம் வந்தனர். பின்பு, கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீப ஆராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.