திருக்கடையூர் அமிர்த நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2024 05:06
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான அமிர்த வள்ளி தாயார் சமேத அமிர்த நாராயண பெருமாள் கோவில் உள்ளது. அபிராமி அம்மை தோன்றுவதற்கும், தேவர்களுக்கு அமிர்தம் பெறுவதற்கும் காரணமான விஷ்ணு பகவான் இத்தலஸத்தில் அமிர்த நாராயணப் பெருமாளாக அருள்பாலிக்கிறார். கர்ப்பிணிகள் அமிர்தவல்லி தாயாரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் சிதிலமடைந்து புகர்மண்டி காணப்பட்ட நிலையில் பாலாலம் செய்யப்பட்டு திருப்பணிகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று பழமை மாறாமல் கோவில் கட்டி முடிக்கப்பட்டு இன்று ககும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மங்கள வாத்தியங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மாச்சாரியார் சுவாமிகள், மன்னார்குடி, செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் முன்னிலையில் விமான கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டவாறு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பெருமாள் தாயார் திருக்கல்யாணமும், வீதி உலா காட்சியும் நடைபெற்றது.