பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் திருக்கோயில் முதலாமாண்டு விழா விமர்சையாக நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே மகா மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. பழமையான இக்கோவில் பெரும் பொருட்செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு மே, 24ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. கோவிலின் முதலாம் ஆண்டு பெருவிழா நடந்தது. விழாவையொட்டி, வேள்வி வழிபாடுகள், பஜனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.