Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ஆந்திர முதல்வர் ... வஞ்சிநகரம் சித்திவிநாயகர், வஞ்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வஞ்சிநகரம் சித்திவிநாயகர், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி நெல்லையப்பர் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
திருநெல்வேலி நெல்லையப்பர் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2024
12:06

திருநெல்வேலி:நெல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலையில் நடந்த கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தின் முக்கிய சிவாலயங்களில் ஒன்றான, நெல்லையப்பர் கோவிலின் தேரோட்டம், வரும் 21ம் தேதி நடக்கிறது. அதன் முன்னோட்டமாக, ஆனி தேர்த்திருவிழா கொடியேற்றம், இன்று நடந்தது. திருவிழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 3 மணிக்கு திருக்கோவில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூபம் காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கும் மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளயாகசாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது . சுவாமி அம்பாள் ஆலய பிரதான கொடிமரத்திற்கு அருகில் ஏழுந்தருள கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று  காலை 04.30 மணிக்கு மேல் 05.30 க்குள் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. தொடா்ந்து கொடிமரத்திற்கு  16 வகை  பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பனா்கள் நான்கு வேதம் கூற ஓதுவாமூர்த்திகள் பஞ்சபுராணம் பாட கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி கோபுர ஆரத்தி சோடச உபசாரனைகள் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  10 நாட்கள் நடைபெறும் இத் திருவிழாவில் தினமும் சுவாமி அம்பாள் காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் ஏழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுத்து ரதவீதிகளில் வீதிஉலா  நடைபெறும். கோயில் கலையரங்கத்தில் தினமும் மாலை சமயச்சொற்பொழிவு,கர்நாடக இன்னிசை, ஆன்மீகக் கருத்தரங்கம், பக்தி இன்னிசைக்கச்சேரி,புராண நாடகம், என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் திருத்தேரோட்டம் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; பொன்னம்பலமேட்டில் மகரஜோதியையும்,மகர நட்சத்திரத்தையும் தரிசித்த ஆனந்தத்தில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
 பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடுவாயூர் அருகே உள்ள கேரளபுரம் விசாலாட்சி சமேத ... மேலும்
 
temple news
வானுார்; வானுார் அருகே வெள்ளந்தாங்கி வீரனார் கோவிலில் ஆண்கள் மட்டும் பொங்கலிட்டு வழிபாடு ... மேலும்
 
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7.00 மணி முதல் 8.00 மணி.தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழியே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar