திருமலை; திருப்பதி, வெங்கடேஸ்வர ஸ்வாமியின் பிரதியான போக ஸ்ரீனிவாச மூர்த்தியின் வருடாந்திர ‘சஹஸ்ர கலசாபிஷேகம்’ நாளை ஜூன் 16 ஆம் தேதி திருமலை கோவிலில் கொண்டாடப்படுகிறது. கோயிலுக்குள் உள்ள பங்காரு வக்கிலியில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஆர்ஜித சேவைகள் வழக்கம் போல் நடைபெறும். கிமு 614 இல் பல்லவ ராணி சாமவாய் (பெருந்தேவி) பிரதிஷ்டை செய்த போக ஸ்ரீனிவாச மூர்த்தியின் 18 அங்குல வெள்ளி சிலையின் வரலாற்று காட்சியை நினைவுகூரும் வகையில் இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் வழக்கமாக மலைக்கோயிலில் மேற்கொள்ளப்படுகிறது.