திருவொற்றியூர் : திருவொற்றியூர், தெற்கு மாட வீதி, சங்கர காலனியில் புதிதாக விநாயர் கோவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக கோவில் அமைவிடத்திற்கு வருகை தந்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விநாயகர் சிலை வைக்கப்பட உள்ள பீடத்திற்கு பூஜைகள் செய்து, இயந்திர தகடுகளை வைத்து ஆசிர்வாதம் செய்தார். மேலும், குடமுழுக்கு சிறப்பாக நடைபெற ஆசி வழங்கினார். பின், சங்கர காலனியில் அமைந்துள்ள 55வது காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், பீடத்தை தரிசித்து, பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கி, அங்குள்ள கோசாலைக்கும் சென்றார்.