ஆனி செவ்வாய்; பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2024 10:06
கோவை; பெரியநாயக்கன்பாளையம் - குப்பிரசி பாளையம் ரோட்டில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆனி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் சந்தன காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.