திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2024 11:06
திருவள்ளூர்; திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில். இங்கு இந்த ஆண்டு ஆனிப்பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை 7:25 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மாலை சுவாமி தங்க தோளுக்கினியன் வாகனத்தில் திருவீதி புறப்பாடும் நடந்தது. பிரம்மோற்சவ திருநாளில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை வரும் 19ம் தேதி காலையிலும், தேர்த்திருவிழா வரும் 23ம் தேதி காலை நடைபெறும்.