பதிவு செய்த நாள்
22
ஜூன்
2024
10:06
பெரியகுளம்; பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் ஆனி மாதம் பவுர்ணமி பூஜையை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். வர்த்தக பிரமுகர் வசந்த் அன்னதானம் வழங்கினார். ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர்.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனி மாதம் வெள்ளிக்கிழமை பவுர்ணமி பூஜையை முன்னிட்டு அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் பவுர்ணமி பூஜையை முன்னிட்டு விக்னேஸ்வரன் பூஜை, சங்கல்பம், அக்னி பிரதிஷ்டை, கலச பூஜை மற்றும் ஹோமங்கள் வளர்க்கப்பட்டன. மகாலட்சுமி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் அரிசிமாவு உட்பட 11 வகையான அபிஷேகம் நடந்தது. தாமரை பூ, ரோஜா பூ, செம்பருத்தி உள்ளிட்ட பூக்களை கொண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அனைதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டாக்டர் மகாஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.